உடுமலை ஏரிப்பாளையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் வீடுகளாக எடுத்து கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.



வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் வீடுகளாக எடுத்து கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும் மற்றும் அனைத்து பிரிவு தலைவர்களும் ஒன்றிணைந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு மற்றும் தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.



தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டு சாமி, கண்ணுச்சாமி, மாவட்ட துணை தலைவர் முத்துகுமார், மற்றும் உடுமலை நகர தலைவர் கோ.ரவி, வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், சிறுபான்மை பிரிவு மஜீத் உட்பட அனைத்து துறை பிரிவு நிர்வாகிகள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...