கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை பிப்.8 மற்றும் பிப்.10 ஆகிய தேதிகளில் ரத்து- சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06812) மற்றும் காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பபில், வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை-மேட்டுப்பாளையம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.7) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06812) மற்றும் காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06813), நண்ற்பகல் 12.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06815) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...