கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை பிப்.8 மற்றும் பிப்.10 ஆகிய தேதிகளில் ரத்து- சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06812) மற்றும் காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பபில், வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை-மேட்டுப்பாளையம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.7) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06812) மற்றும் காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06813), நண்ற்பகல் 12.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06815) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...