சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு உடுமலையில் கார்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம்

பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை, கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்துதுறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காரில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இதையடுத்து பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை,கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



ஊர்வலத்தின் போது காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சாலை போக்குவரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, ஓட்டுனர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...