சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு உடுமலையில் கார்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம்

பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை, கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்துதுறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காரில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இதையடுத்து பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை,கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



ஊர்வலத்தின் போது காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சாலை போக்குவரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, ஓட்டுனர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...