தென் குமாரபாளையம் கிராமத்திற்கு சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள தென்குமாரபாளையம் கிராமத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.



மேலும் இந்த கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை கிராம முற்றுகையிட்டு சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்து முறையிட்டனர்.

அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் இருந்தும் தற்போது மின்தடையும் ஏதும் இல்லாத போதிலும் தங்கள் கிராமத்திற்கு நாள்தோறும் ஒதுக்கப்பட்ட தண்ணீர் முறையாக வருவதில்லை எனவும், தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலானதால் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீர் இல்லாத காரணத்தால் கிராமத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முறையாக குடிநீர் வழங்காமல் மெத்தனப் போக்காக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் தண்ணீர் வரவில்லை என்றால் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என முற்றுகையிட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...