கோவையில் 15 பவுன் வழிப்பறி செய்ததாக காவல்துறையிடம் நாடகமாடிய அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர்

சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.


கோவை: கோவை கணபதி நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்திரகலா (52), இவர் அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சத்தி சாலையில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இவர்களது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு சென்றதாகவும், அப்போது சந்திரகலாவும் அவரது கணவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாகவும், இதனால் சந்திரகலாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த மாதம் கணபதி பகுதியில் சந்திரகலாவிடம் வழிப்பறியில் முயற்சி செய்ததாகவும், ஆனால் 15 சவரன் நகையை நான் வழிப்பறி செய்யவில்லை என்றும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்ட போது நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...