திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் போராட்டம்

வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், பட்டா வழங்குவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும், தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுபிறகும் கண்டுகொள்ளவில்லை என குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டுக்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கடந்த 1999 ஆம் ஆண்டு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் அதனை எதிர்த்து நபர் ஒருவர் தொடர்ந்து வழக்கின் காரணமாக பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பிறகு வசிக்கும் பொது மக்கள் அரசு நிர்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த கிரைய தொகையை செலுத்தி பட்டா பெற்றுக்கொள்ள வலியுறுத்தியது.



இதற்காக வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுபிறகும் காலதாமதம் செய்யப்படுவதாக கூறி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் தங்களை நேரடியாக சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...