கோவையில் கையில் குப்பையுடன் அதிமுக கவுன்சிலர்கள் நூதன போராட்டம்

கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். னசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.


கோவை: கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்வு நடைபெறும் வளாகத்திற்கு வெளியே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஷர்மிளா, ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கையில் குப்பையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அவர்கள், கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என கையில் நோட்டீஸ் வைத்து வெளியே நின்றனர். தினசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால் போத்தனூர், உக்கடம், குடியமுத்தூர், மதுக்கரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி நினைவூட்டி, அதை விரைந்து சரி செய்யவேண்டி போராடினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...