கோவையில் கையில் குப்பையுடன் அதிமுக கவுன்சிலர்கள் நூதன போராட்டம்

கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். னசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.


கோவை: கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்வு நடைபெறும் வளாகத்திற்கு வெளியே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஷர்மிளா, ரமேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கையில் குப்பையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அவர்கள், கோவை மாநகரில் சேரும் குப்பைகளை அகற்ற தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என கையில் நோட்டீஸ் வைத்து வெளியே நின்றனர். தினசரி அகற்ற படாத குப்பைகளுக்கு எதற்கு குப்பை வரி செலுத்தவேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால் போத்தனூர், உக்கடம், குடியமுத்தூர், மதுக்கரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி நினைவூட்டி, அதை விரைந்து சரி செய்யவேண்டி போராடினர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...