மதுக்கரை நகராட்சி குப்பைகள் கல்குவாரியில் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு - பொது மக்கள் புகார்

27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், 23 ஆவது வார்டு சல்காரா ஹோட்டல் பின்புறமுள்ள பயன்பாடற்ற கல் குவாரியில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 13 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகின்றன. ஒரு டன் குப்பைக்கு 5565 ரூபாய் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.


கோவை: மதுக்கரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, 23 ஆவது வார்டு சல்காரா ஹோட்டல் பின்புறமுள்ள பயன்பாடற்ற கல் குவாரியில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 13 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகின்றன. ஒரு டன் குப்பைக்கு 5565 ரூபாய் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.

23 ஆவது வார்டில் ராஜேஸ்வரி நகர், ஸ்ரீ என்கிளேவ், பாலு என்கிளேவ், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1500 பேர் வசித்து வருகின்றனர். சாலையோரம் கொட்டப்படும் குப்பையில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தீ வைப்பதால், தீ கொளுந்து விட்டு எரிகின்றன. இதனால் காற்றுமாசு அடைகிறது. மூச்சு திணறல், சுவாச கோளாறுகள் இரவு நேர தூக்கம் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் தீயணைப்பு துறையின் உதவியை நாட வேண்டிய அவசியம் உள்ளது.

குப்பைகளை எரிப்பதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் வேறு வழியில்லாமல் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.



அது சம்மந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் செவி சாய்க்காமல் கண்டு காணாமல் இருந்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...