கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணையவழி பட்டப் படிப்பில் சேர்க்கை தொடக்கம்

இணையவழியில் பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் இணையவழியில் நடத்தும் பட்டப் படிப்புகளில் சேர மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது, பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தொலைநிலைக் கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் இணையவழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறப்பட்டு, சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி, பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 2024 அமா்வுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இணையவழியில் நடத்தப்படும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பம் பதிவு செய்தல், கல்விக் கட்டணம், பாடம் நடத்துவது, தோ்வு, சான்றிதழ் வழங்குவது என அனைத்தும் இணையவழியிலேயே நடைபெறும். இந்த நிலையில் இணையவழி படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...