நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியதை தொடர்ந்து திருப்பூரில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தனது கட்சியின் பெயரை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என புதிதாக துவங்கப்பட்டுள்ள கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து நீண்ட நாட்களாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து இருந்த அவரது ரசிகர்கள் தமிழக முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.



அதன்படி திருப்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



நிகழ்வில் வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் குத்புதின், மாவட்டச் செயலாளர் சின்னதுரை, மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன், மாவட் மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் சேக் சித்திக் சதக்கத்துல்லா, வாசிம் விக்கி, செல்வா, கார்த்திக், அஜித் குமார் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...