உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்

அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிப்படி, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் மீண்டும் உப்பாறு அணையின் உட்பகுதியில் தற்காலிக பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் கூறியது போல் தண்ணீர் திறந்து விடாததால் மீண்டும் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், சங்க நிர்வாக உறுப்பினர் சிவகுமார் தலைமையில் கடந்த ஐந்து நாட்களாக பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் முன்னிலையில் பொதுப்பணித்துறை உடுமலை பொள்ளாச்சி கோட்ட செயல் பொறியாளர் மகேந்திரன், தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன், தாராபுரம் குண்டடம் (பொறுப்பு) காவல் நிலைய ஆய்வாளர் அருள், திருப்பூர் உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் உள்ளதாகவும், அதை வழங்குவதற்கு சட்ட முறைப்படி உத்தரவு பிறப்பித்து அதன் பிறகு வழங்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை உப்பாறு பாசன விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இதனால் போராட்டத்தை விவசாயிகள் தற்காலிக ஒத்திவைத்தனர். இந்த நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் மீண்டும் உப்பாறு அணையில் உட்பகுதியில் தற்காலிக பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அணைக்கு தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...