கோவை உற்பத்தித்திறன் குழு சார்பில் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கோவையில் இன்று கருத்தரங்கம்

பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வோடும் விதிகளின்படியும் அமலாக்கவேண்டியவைகள் குறித்து நிறுவனங்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை உற்பத்தித்திறன் குழு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநனரத்தின் வழிகாட்டுதலின்படி இன்று ஒரு நாள் கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.



முதன்முறையாக நடைபெறும் இந்த கருத்தரங்கை கே.பி.ஆர் குழு தலைவர் கே.பி.ராமசாமி துவக்கி வைத்தார். இநநிகழ்ச்சியின் தொடக்கத்தில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.எம்.நடராஜன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், தொழில்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.அருள் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் (மனிதவள மேம்பாட்டுத்துறை) கவிதாசன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து, தி க்ரோத் அகாடமியின் தலைமை வழிகாட்டியான ஆர்.துரைசாமி 'சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான ஊக்குவிப்பு' பற்றியும், ஐடிசி நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ஆர்.சண்முகநாதன் 'சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய சட்டமுறைகள்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, 'அவசரகால நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் வந்தே மாதரம் மாதவன் மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் ரமேஷ் ராஜா பிரபு ஆகியோர் உரையாற்றினர்.

மேலும், இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக ''விபத்துக்கு பெரிதும் காரணம்'' என்னும் தலைப்பில் 'அறியாமையே', 'அலட்சியமே' என்னும் இருவேறு கருத்தில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

இதில், அறியாமையே என்னும் கருத்தில் கோவை பொன்.அண்ணாதுரை மற்றும் வைகறை பூங்கொடி ஆகியோரும், அலட்சியமே என்னும் கருத்தில் கோவை ஃப்லோ லின்க் சிஸ்டம்ஸ் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி குருசெல்வராஜ் மற்றும் இன்டகரா ஆட்டோமேஷன் தலைமை மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஏ.பொன்மலர் ஆகியோரும் பேசவுள்ளனர். 

இப்பட்டிமன்றத்திற்கு கோவை உற்பத்தித் திறன் குழு தலைவர் கவிதாசன் நடுவராக செயல்படவுள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...