பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் கல்லூரியில் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்களின் கலாச்சார நடனம் அரங்கேற்றம்

ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமான நடனங்களை ஆடி அசத்தினர்.


கோவை: பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளாக பாரம்பரிய நடன கலைகள் மற்றும் இசை கலைஞர்களை ஊக்குவித்தும் விதமாக பல்வேறு அரங்கேற்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்கள் பங்கு பெற்ற கலாச்சார நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்நாட்டு கலாச்சாரம், இலக்கியங்களை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமான நடனங்களை ஆடி அசத்தினர்.

இதை ஆயிரகணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக ரஷ்யா-இந்தியா நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தவும், இந்திய ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றத்திற்கு ஆண்டுதோறும் இந்திய கலைக்குழு ரஷ்யாவுக்கு செல்வதும், ரஷ்யா கலைக்குழு இந்தியாவிற்கும் வருவது வழக்கம். இதன் மூலம் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிவர்த்தனை மேம்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...