பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் கல்லூரியில் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்களின் கலாச்சார நடனம் அரங்கேற்றம்

ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமான நடனங்களை ஆடி அசத்தினர்.


கோவை: பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளாக பாரம்பரிய நடன கலைகள் மற்றும் இசை கலைஞர்களை ஊக்குவித்தும் விதமாக பல்வேறு அரங்கேற்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்கள் பங்கு பெற்ற கலாச்சார நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்நாட்டு கலாச்சாரம், இலக்கியங்களை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமான நடனங்களை ஆடி அசத்தினர்.

இதை ஆயிரகணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக ரஷ்யா-இந்தியா நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தவும், இந்திய ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றத்திற்கு ஆண்டுதோறும் இந்திய கலைக்குழு ரஷ்யாவுக்கு செல்வதும், ரஷ்யா கலைக்குழு இந்தியாவிற்கும் வருவது வழக்கம். இதன் மூலம் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிவர்த்தனை மேம்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் தெரிவித்தார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...