பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் கல்லூரியில் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்களின் கலாச்சார நடனம் அரங்கேற்றம்

ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமான நடனங்களை ஆடி அசத்தினர்.


கோவை: பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளாக பாரம்பரிய நடன கலைகள் மற்றும் இசை கலைஞர்களை ஊக்குவித்தும் விதமாக பல்வேறு அரங்கேற்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்கள் பங்கு பெற்ற கலாச்சார நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்நாட்டு கலாச்சாரம், இலக்கியங்களை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமான நடனங்களை ஆடி அசத்தினர்.

இதை ஆயிரகணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக ரஷ்யா-இந்தியா நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தவும், இந்திய ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றத்திற்கு ஆண்டுதோறும் இந்திய கலைக்குழு ரஷ்யாவுக்கு செல்வதும், ரஷ்யா கலைக்குழு இந்தியாவிற்கும் வருவது வழக்கம். இதன் மூலம் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிவர்த்தனை மேம்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...