கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லாவண்யா ஜுவல்லரிக்கு சொந்தமான ரூ.34.11 கோடி சொத்துக்கள் முடக்கம்

பண மோசடி தொடர்பாக லாவண்யா ஜுவல்லரி நகைக்கடை மீது, ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் லாவண்யா ஜுவல்லரி என்ற தங்க நகை கடை உள்ளது. இங்கு ஏலச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு வகையில் மக்களின் பணத்தை வாங்கி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த நகைக்கடை மீது மோசடி வழக்கு பதிவானது தெரியவந்தது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது 65 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும், பல்வேறு மோசடிகளில் நகை கடை மற்றும் அதன் சகோதர நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த நகைக்கடையை மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை பெயரில் இருந்த ரூபாய் 34.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு குடியிருப்பு இடம், 4 விலை நிலம், ஒரு அடுக்குமாடி வீடு என சென்னை, கோவையில் உள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். நகைக்கடையின் மீது முறையற்ற வகையிலான பணமோசடி பி.எம்.எல்.ஏ வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...