கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லாவண்யா ஜுவல்லரிக்கு சொந்தமான ரூ.34.11 கோடி சொத்துக்கள் முடக்கம்

பண மோசடி தொடர்பாக லாவண்யா ஜுவல்லரி நகைக்கடை மீது, ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் லாவண்யா ஜுவல்லரி என்ற தங்க நகை கடை உள்ளது. இங்கு ஏலச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு வகையில் மக்களின் பணத்தை வாங்கி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த நகைக்கடை மீது மோசடி வழக்கு பதிவானது தெரியவந்தது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது 65 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும், பல்வேறு மோசடிகளில் நகை கடை மற்றும் அதன் சகோதர நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த நகைக்கடையை மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை பெயரில் இருந்த ரூபாய் 34.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு குடியிருப்பு இடம், 4 விலை நிலம், ஒரு அடுக்குமாடி வீடு என சென்னை, கோவையில் உள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். நகைக்கடையின் மீது முறையற்ற வகையிலான பணமோசடி பி.எம்.எல்.ஏ வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...