கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லாவண்யா ஜுவல்லரிக்கு சொந்தமான ரூ.34.11 கோடி சொத்துக்கள் முடக்கம்

பண மோசடி தொடர்பாக லாவண்யா ஜுவல்லரி நகைக்கடை மீது, ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் லாவண்யா ஜுவல்லரி என்ற தங்க நகை கடை உள்ளது. இங்கு ஏலச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு வகையில் மக்களின் பணத்தை வாங்கி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த நகைக்கடை மீது மோசடி வழக்கு பதிவானது தெரியவந்தது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது 65 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும், பல்வேறு மோசடிகளில் நகை கடை மற்றும் அதன் சகோதர நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த நகைக்கடையை மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை பெயரில் இருந்த ரூபாய் 34.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு குடியிருப்பு இடம், 4 விலை நிலம், ஒரு அடுக்குமாடி வீடு என சென்னை, கோவையில் உள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். நகைக்கடையின் மீது முறையற்ற வகையிலான பணமோசடி பி.எம்.எல்.ஏ வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சொத்துக்களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினரும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...