குனியமுத்தூரில் ஒரே மேடையில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத மணமக்களுக்கு திருமணம்

ஆறு ஜோடி இந்துக்கள், மூன்று ஜோடி கிறிஸ்தவர்கள், பதினான்கு ஜோடி இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு அவரவர் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.


கோவை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர்.

75 பெண்களுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு, சென்னையில் 17 ஜோடிகளுக்கும், திருச்சியில் 25 ஜோடிகளுக்கும் கல்யாணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் ஏழை எளிய பெண்கள் 23 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.



கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து வந்து திருமண விழாவில் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மணமக்கள் மணவறைக்கு கேரள சண்டை மேளம் முழங்க உற்சாகமுடன் வரவேற்கப்பட்டனர்.

நல்லிணக்கத்தை வெளிப்படும் விதமாக ஒரே இடத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சார்ந்த 23 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆறு ஜோடி இந்துக்கள், மூன்று ஜோடி கிறிஸ்தவர்கள், பதினான்கு ஜோடி இஸ்லாமியர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.



உற்சாகமுடன் தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்தனர் . இதில் 23 ஜோடிகளுக்கும் 2 லட்சம் மதிப்பிலான கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள், மளிகை சாமான்கள் சீர்வரிசை தரப்பட்டன. 10 கிராம் தங்கமும் தரப்பட்டன. இதில் ஒவ்வொரு மதத்தவருக்கும் அவரவர் மதங்களின் வழிகாட்டுதலாக இருக்கும் குர்ஆன் பைபிள் பகவத் கீதை தரப்பட்டன.

இந்த விழாவில் கலந்து கொண்ட 2000 பேருக்கும் அசைவு உணவு பரிமாறப்பட்டன. வறுமையில் வாடிய ஏழை எளிய பெண்களுக்கு வாழ்வில் மிக முக்கியமான தருணத்தை ஏற்படுத்தித் தந்த அமைப்பினருக்கு மணமக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மனதார அவர்களை பாராட்டினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...