கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு

பிப்ரவரி 6 முதல் 27- ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06035), அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை-சென்னை இடையே பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்துடன் இந்த ரயிலின் சேவை முடிவடைய உள்ள நிலையில் பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிப்ரவரி 6 முதல் 27- ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06035), அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.

இதேபோல, மறுமார்க்கமாக பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும் கோவை-சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்:06036), அன்று இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

மேலும் இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...