சிவன்மலையில் தேர்த்திருவிழாவின் 12ம்‌ நாள்‌ தெப்ப உற்சவ நிகழ்வு – திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிவன்மலையில், உற்சவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவர் தெப்பக் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து சிவன்மலை செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பில் 12 ஆம் நாள் முறையை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த ஜனவரி 17ஆம் தேதி புதன்கிழமை துவங்கியது. இதனை தொடர்ந்து ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை சிவன்மலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து 3 நாட்கள் தேரோட்டத்தை சிறப்பித்தனர்.

இதனை அடுத்து மூன்றாம் நாள் தேரோட்டம் முடிந்ததும், இரவு சுமார் 7 மணி அளவில் தேரிலிருந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சன்னதிக்கு எழுந்தருளினார். பின்னர் உற்சவருக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்று வடம் பிடித்த மற்றும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்‌ வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று உற்சவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவர் தெப்பக் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து சிவன்மலை செங்குந்த முதலியார் சமூகத்தினர் சார்பில் 12 ஆம் நாள் முறையை நடத்தினர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் 13ஆம் நாள்‌ நிகழ்வாக நாளை வியாழக்கிழமை மதியம் 12 மணி அளவில் மஹா தரிசனம் நடைபெற உள்ளது‌. பக்தர்கள் அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி அருள் பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...