உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் திருப்பூரில் தொடக்கம் - உடுமலையில் ஆட்சியர் ஆய்வு

குடிமங்கலம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் சென்று குழந்தைகளிடம் கலந்துரையாடினார். அதன்பின்னர், பள்ளி மாணவர்களிடையே குறைகளை அவர் கேட்டறிந்தார். இதன் பின் உடுமலை கால்நடை மருத்துவமனைக்கு சென்றவர், அங்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மாதத்தில் வரும் கடைசி புதன்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்துக்கு சென்று மாவட்ட ஆட்சியர் அங்கேயே தங்கி அங்குள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களிடம் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைகிறதா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

நேரடியாக சென்று அங்கன்வாடி மையம், நியாயவிலை கடை அரசு பள்ளிகள், கால்நடை துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சரியாக இயங்குகிறதா?. அத்துறையில் வரும் நலத்திட்டங்கள் சரியாக மக்களை சென்று அடைகிறதா என்ற ஆய்வினை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது முதல் வட்டமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு வருகை புரிந்தார். வரும் வழியில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களை ஆய்வு செய்தார்.



குடிமங்கலம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று குழந்தைகளிடம் கலந்துரையாடினார். பள்ளி மாணவர்களிடையே குறைகளை கேட்டிருந்தார்.



இதன் பின் உடுமலை கால்நடை மருத்துவமனைக்கு சென்றவர், அங்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் கல்லாபுரம் ஊராட்சி கொம்பே கவுண்டன் துறையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் கல்லாபுரம் ஊராட்சி போலவாடி புது நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகளையும் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வின்போது உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...