தேசிய அளவிலான கேலோ இந்தியா களரி பயட்டு விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு உடுமலையில் உற்சாக வரவேற்பு

உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் சுர்ஜித் கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில் சுவடுகள் பிரிவில் கலந்துகொண்டு, வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


திருப்பூர்: தேசிய அளவிலான கேலோ இந்தியா களறிபயட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.



இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 16 மாநிலச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.



இதில் உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் சுர்ஜித் கலந்து கொண்டு கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில் சுவடுகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.



இந்த நிலையில் பள்ளியின் சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



களரி போட்டியில் தமிழகத்தில் வெள்ளி பதக்கம் வென்ற ஒரே மாணவர் சுர்ஜித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே 2021 ஹரியாணை மாநிலத்தில் நடைபெற்ற கேலோ போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. களரி பயட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை உடுமலை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே. ராமசாமி, செயலாளர் ஆர்.கே.ஆர். கார்த்திக் குமார், பள்ளி முதல்வர் டி.மாலா பயிற்று வித்த சிலம்பம் மற்றும்‌ களறி பயட்டு ஆசான் வீரமணி மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பயிற்சியாளர் வீரமணி கூறும் பொழுது, தமிழகத்தில் தற்சமயம் களரி போட்டியில் விளையாடுவதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவது போல வெற்றி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...