கோவை ஈஷா கல்லுாரியில் அடுத்த மாதம் 10ம் தேதி(10.02.2024) மாபெரும் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாமில், உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்காக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம் மூலமாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், கோவை - பாலக்காடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், (10.02.2024) அன்று நடத்தப்படுகிறது.

இதில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்காக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இம்முகாமில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்று, வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பணி நியமன உத்தரவு, உடனுக்குடன் வழங்கப்படும். இதன் காரணமாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்தாகாது. கூடுதல் விபரங்களுக்கு, 94990-55937 என்ற எண்ணுக்கு காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...