நில அளவை தகவல்கள் பற்றி அறிய தமிழ் நிலம் மொபைல் செயலி - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜன.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை, www.tnlandsurvey.tn.gov.in என்ற இணைய தளத்தை, NIC மூலம் உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்துடன் 'தமிழ் நிலம்' என்கிற மொபைல் செயலி இணைக்கப்பட்டிருக்கிறது.

இதில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான, இணைய வழி சேவை தமிழ் நிலம் Citizen Portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் - ஊரகம் மற்றும் தமிழ்நிலம் - நகரம் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக, மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க 'அ' பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விபரங்களை எங்கிருந்தாலும் அறியும் வகையில், www.eservices.tn.gov.in என்ற இணைய தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய, வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சிகளின் விபரங்கள், இத்துறையின் சுற்றறிக்கைகள், அரசாணைகள் மற்றும் பரப்பளவு போன்றவற்றை அறியலாம்.

மேலும் பொதுமக்கள் நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...