திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி - விவசாயிகள் போராட்டம் முடிவு

தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பலகட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.



இந்த நிலையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பொதுப்பணித்துறை உடுமலை பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் மகேந்திரன் மற்றும் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தாராபுரம் குண்டடம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் திருப்பூர் ஒப்பாரி பாசன சங்க விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் திருமூர்த்தி அணையில் இருந்து அணைக்கு தண்ணீர் வழங்குவதாக உள்ளதாகவும் உப்பாறு அணைக்கு திறந்து விடுவதாக அதிகாரிகள் கொடுத்து வாக்குறுதியை அடுத்து பாசன விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.



இதனை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...