திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி - விவசாயிகள் போராட்டம் முடிவு

தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பலகட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.



இந்த நிலையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பொதுப்பணித்துறை உடுமலை பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் மகேந்திரன் மற்றும் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தாராபுரம் குண்டடம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் திருப்பூர் ஒப்பாரி பாசன சங்க விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் திருமூர்த்தி அணையில் இருந்து அணைக்கு தண்ணீர் வழங்குவதாக உள்ளதாகவும் உப்பாறு அணைக்கு திறந்து விடுவதாக அதிகாரிகள் கொடுத்து வாக்குறுதியை அடுத்து பாசன விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.



இதனை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...