திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி - விவசாயிகள் போராட்டம் முடிவு

தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பலகட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.



இந்த நிலையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பொதுப்பணித்துறை உடுமலை பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் மகேந்திரன் மற்றும் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தாராபுரம் குண்டடம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் திருப்பூர் ஒப்பாரி பாசன சங்க விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் திருமூர்த்தி அணையில் இருந்து அணைக்கு தண்ணீர் வழங்குவதாக உள்ளதாகவும் உப்பாறு அணைக்கு திறந்து விடுவதாக அதிகாரிகள் கொடுத்து வாக்குறுதியை அடுத்து பாசன விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.



இதனை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...