தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 44,480 ஏக்கர் பயன்பெறும் வகையில் இரண்டாம் சுற்று தண்ணீர் திறந்து விட கோரி ஆழியார் திட்ட குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரியிடம் கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர்.



இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு முற்றுகைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சார் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...