தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 44,480 ஏக்கர் பயன்பெறும் வகையில் இரண்டாம் சுற்று தண்ணீர் திறந்து விட கோரி ஆழியார் திட்ட குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரியிடம் கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர்.



இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு முற்றுகைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சார் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...