தாராபுரம் அருகே உப்பாறு அணையில் போராட்டத்தில் பங்கேற்ற பெண் சாமியாடியதால் பரபரப்பு

நான்காம் நாள் கட்ட போராட்டமாக உப்பாறு அணை உள்ள சேற்று தண்ணீரில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 400க்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் இருந்து சாரை சாரையாக சென்று அணை நீரில் இறங்கி அணைக்கு தண்ணீர் வேண்டும் என கோசம் எழுப்பினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து நான்கு நாட்களாகியும் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது.



இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் உப்பாறு அணை உட்பகுதியில் இறங்கி அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வகையில் நான்காம் நாள் கட்ட போராட்டத்தில் உப்பாறு அணை உள்ள சேற்று தண்ணீரில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அணை நீரில் இறங்க வேண்டாம் என வலியுறுத்தி இருந்தபோதிலும் 400க்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் இருந்து சாரை சாரையாக நடந்து வந்து அணை நீரில் இறங்கி அணைக்கு தண்ணீர் வேண்டும் என கோசம் எழுப்பினர்.



அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சாரதி என்ற பெண்மணிக்கு சாமி வந்து ஆடினார். அணைக்கு தண்ணீர் தராத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாமி ஆடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...