பண்ணைகிணறு ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் - வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பண்ணைகிணறு ஊராட்சியில் கோழி குட்டை, முக்கூடு ஜல்லிப்பட்டி, கிராமங்களில் ஏழை எளிய மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகின்றது.



இந்த நிலையில் பலமுறை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்ட முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெண்கள் கூறியதாவது, மகளிர் உதவி தொகை எங்கள் கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைக்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. மேலும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளோம்.



ஆகையால் ஏழை எளிய மக்களுக்கு அதிகாரிகள் முறையாக களஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் உடுமலை வட்டாட்சியர் சுந்தரத்திடம் கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. வட்டாட்சியர் சுந்தரம் சில தினங்களில் நேரில் ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...