பண்ணைகிணறு ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் - வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பண்ணைகிணறு ஊராட்சியில் கோழி குட்டை, முக்கூடு ஜல்லிப்பட்டி, கிராமங்களில் ஏழை எளிய மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகின்றது.



இந்த நிலையில் பலமுறை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்ட முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெண்கள் கூறியதாவது, மகளிர் உதவி தொகை எங்கள் கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைக்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. மேலும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளோம்.



ஆகையால் ஏழை எளிய மக்களுக்கு அதிகாரிகள் முறையாக களஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் உடுமலை வட்டாட்சியர் சுந்தரத்திடம் கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. வட்டாட்சியர் சுந்தரம் சில தினங்களில் நேரில் ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...