பணி நிரந்தரம் கேட்டு வரும் 31ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம்- பொள்ளாச்சியில் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இறந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31ஆம் முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகம் முழுவதும் 35 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

திமுக ஆட்சியில் மூன்று முறையும், அதிமுக ஆட்சியில் மூன்று முறையில் மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். தற்போது 13 ஆயிரத்து 500 பேர் வேலை இழந்து உள்ளார்கள். கடந்த தேர்தலில் மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.



சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இறந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் மற்றும் அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 31ஆம் முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

எங்களது போராட்டங்கள் நிறைவேற்றும் வரை பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...