குறுஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் மக்கள் மறியல்

பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி கிராமத்தை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தரப்பில் தீர்மானம் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட்டால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சித் துறை அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அத்துடன் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...