தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த் திரு விழாவில் இன்று மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. சுப்பிரமணியர் ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா மலை அடிவராத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.



இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்குகிறது. தை பூசம் தேர் திருவிழாவின் ஏற்பாடுகளை, இந்தசமய அறநிலையத்துறையினர் செய்துவருகின்றனர். ஏராளமானம் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ஆவலுடன் உள்ளனர். இந்த மூன்று நாட்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, கம்பத்தட்டம், வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்சிகள் நடைபெறுகிறது.

பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். திருத்தேர் 3 தினங்கள் மலையை வலம் வந்து, ஞாயிறுக்கிழமை தேர்நிலை அடைகிறது. மேலும் தமிழகம் முழுவதிலுமே நேற்று தைப்பூசவிழா துவங்கிய நிலையில் சிவன்மலையில் மட்டுமே இன்று துவங்குகின்றது என்பது கூடுதல் சிறப்பு.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...