கிளாசிக் போலோ-வின் புதிய 'க்ரீன் பேக்'

கோவை மாநகரில் விரைவில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ள நிலையில், கிளாசிக் போலோ ஆடையகம் சார்பில் இயற்கை முறையில் தயாரித்த பைகள் அறிமுகமாகின்றன. முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் ஆன துணிப்பைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவுள்ள நிலையில் இதற்கான அறிமுக விழா நாளை, 'மை ஷாப்பிங் மை பேக்' கண்காட்சியில் நடைபெற உள்ளது. 



இது குறித்து கிளாசிக் போலோ ஆடையகத்தை கோவை மாவட்டத்தில் தனி உரிமை எடுத்திருக்கும் ரதிஸ் குமார் கூறியதாவது:-

நாங்கள் அறிமுகப்படுத்த உள்ள பயோ க்ரேடபில் துணிப்பைகள் பிளாஸ்டிக் கலப்படம் இன்றி முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த பைகளை 'ட்ரு க்ரீன்' என்ற நிறுவனம் எங்களுக்கு தயாரித்து வழங்குகிறது. 

சோளம், உணவுபொருட்கள் மற்றும் நார் பொருட்களின் பாக்டீரியாக்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பைகள் சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காது.

மேலும், இந்த க்ரீன் பேக் குறைந்தபட்சம் சில நாட்களுக்கு பிறகு தானாக மக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) இந்த புதிய துணிப்பையை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன்  முன்னிலையில் வெளியிட இருக்கிறோம்.

கோவை மாவட்டத்தில் இது போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் முதல் க்ரீன் பேக் எங்களுடையது என்பதில் பெருமையடைகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...