மாநில செம்மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்-பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் புகார்

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாணவரணி சார்பில் பொள்ளாச்சி பிளாக் மாரியம்மன் கோவில் ஜீவா திடலில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



கூட்டத்துக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு மாநில மொழிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் செம்மொழிகளாக கருதப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கி உள்ளது.

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலங்களை முடக்குவதற்கும், மாநில மொழிகளை முடக்கும் செயல் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...