பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் லோகாம்பாள், சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதாக கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...