தாராபுரம்_பழனி சாலையில் உள்ள ஆலங்காட்டு பிரிவில் ஏற்பட்ட விபத்தில் சித்தர் சமாதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 8 பேர் காயம்

இனோவா கார் ஒன்று பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி அதி வேகமாக வந்து ட்ராவலர் வாகனத்தை ஓவர் டேக் எடுத்து சென்றது. இதனால் திடீரென வேனில் முன் பகுதியில் வந்த இனோவா காரின் மேல் மோதல் இருக்க ட்ராவலர் டிரைவர் பிரேக் அடிக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கம்பட்டியில் சித்தர் சமாதி உள்ளது. இங்கு அவரது பக்தர்கள் ஆலயம் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் குமாரபாளையம் தேவூர் கிராமத்திலிருந்து 19 பேர் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக நேற்று இரவு கணக்கம்பட்டிக்கு வந்தனர்.

அங்கு சித்தர் சமாதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று பழனி_தாராபுரம் சாலையில் 407-ட்ராவலர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம்_பழனி சாலையில் உள்ள ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது அப்போது இனோவா கார் ஒன்று பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி அதி வேகமாக வந்து ட்ராவலர் வாகனத்தை ஓவர் டேக் எடுத்து சென்றது.



இதனால் திடீரென வேனில் முன் பகுதியில் வந்த இனோவா காரின் மேல் மோதல் இருக்க 407 ட்ராவலர் டிரைவர் சரவணன் (33) பிரேக் அடிக்க கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.



இதில் பயணித்த 19 பேரில் அஜித்குமார், மங்கமாள், செல்வராஜ், குப்பாய், அன்புராஜ், உட்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...