தாராபுரம்_பழனி சாலையில் உள்ள ஆலங்காட்டு பிரிவில் ஏற்பட்ட விபத்தில் சித்தர் சமாதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 8 பேர் காயம்

இனோவா கார் ஒன்று பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி அதி வேகமாக வந்து ட்ராவலர் வாகனத்தை ஓவர் டேக் எடுத்து சென்றது. இதனால் திடீரென வேனில் முன் பகுதியில் வந்த இனோவா காரின் மேல் மோதல் இருக்க ட்ராவலர் டிரைவர் பிரேக் அடிக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கம்பட்டியில் சித்தர் சமாதி உள்ளது. இங்கு அவரது பக்தர்கள் ஆலயம் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் குமாரபாளையம் தேவூர் கிராமத்திலிருந்து 19 பேர் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக நேற்று இரவு கணக்கம்பட்டிக்கு வந்தனர்.

அங்கு சித்தர் சமாதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று பழனி_தாராபுரம் சாலையில் 407-ட்ராவலர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம்_பழனி சாலையில் உள்ள ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது அப்போது இனோவா கார் ஒன்று பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி அதி வேகமாக வந்து ட்ராவலர் வாகனத்தை ஓவர் டேக் எடுத்து சென்றது.



இதனால் திடீரென வேனில் முன் பகுதியில் வந்த இனோவா காரின் மேல் மோதல் இருக்க 407 ட்ராவலர் டிரைவர் சரவணன் (33) பிரேக் அடிக்க கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.



இதில் பயணித்த 19 பேரில் அஜித்குமார், மங்கமாள், செல்வராஜ், குப்பாய், அன்புராஜ், உட்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...