கோவை மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவத்தில், சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும், வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு காட்சியளித்தனர்.


கோவை: கோவையில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜனவரி 24) திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.



அதன்படி சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும், வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினர். பின்னர் விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு சுப்ரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு மங்களநாணை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். திருமண கோணத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை பக்தர்கள் வழிபட்டனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...