கொள்ளுபாளையம் கிராமத்தில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம்

முகாமில், 30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சையில் பங்கேற்று பயனடைந்தனர். பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் அருகே கொள்ளுபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர் குமாரவேல் தலைமை தாங்கினார். முகாமில் ஈனியல் துறை தலைவர் செந்தில்குமார், இணை பேராசிரியர் வீணா, உதவி பேராசிரியர் மருத்துவர் கல்யாண், அறுவை சிகிச்சை துறை தலைவர் முனைவர் சிவசங்கர், கால்நடை உணவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலமுருகன் மற்றும் விரிவாக்கத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம் குறித்து விளக்கம் அளித்தனர்.

30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...