கொள்ளுபாளையம் கிராமத்தில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம்

முகாமில், 30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சையில் பங்கேற்று பயனடைந்தனர். பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் அருகே கொள்ளுபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர் குமாரவேல் தலைமை தாங்கினார். முகாமில் ஈனியல் துறை தலைவர் செந்தில்குமார், இணை பேராசிரியர் வீணா, உதவி பேராசிரியர் மருத்துவர் கல்யாண், அறுவை சிகிச்சை துறை தலைவர் முனைவர் சிவசங்கர், கால்நடை உணவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலமுருகன் மற்றும் விரிவாக்கத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம் குறித்து விளக்கம் அளித்தனர்.

30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...