கொள்ளுபாளையம் கிராமத்தில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம்

முகாமில், 30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சையில் பங்கேற்று பயனடைந்தனர். பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் அருகே கொள்ளுபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர் குமாரவேல் தலைமை தாங்கினார். முகாமில் ஈனியல் துறை தலைவர் செந்தில்குமார், இணை பேராசிரியர் வீணா, உதவி பேராசிரியர் மருத்துவர் கல்யாண், அறுவை சிகிச்சை துறை தலைவர் முனைவர் சிவசங்கர், கால்நடை உணவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலமுருகன் மற்றும் விரிவாக்கத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம் குறித்து விளக்கம் அளித்தனர்.

30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...