சின்னியகவுண்டம்பாளையத்தில் போர்ஜரி போக்குவரத்தில் ஈடுபட்ட லாரி ஓனர்- விபத்தால் ஏற்பட்ட விபரீதம்

விபத்தில் சிக்கிய லாரியின் எண்ணும், அங்குவந்த மற்றொரு லாரியின் எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பல்லடம் போலீசார் இரண்டு லாரிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இரும்பு கம்பெனி கருமண்ணை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலையில் பள்ளத்தில் இறங்கியது.

அப்போது இதை அறிந்த லாரி உரிமையாளரான பல்லடம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் மற்றொரு லாரியுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அதே எண் கொண்ட ஓனர் எடுத்து வந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அவர் இறங்கி விபத்தை பார்த்த போது இதனை கண்ட அப்பகுதி மக்கள் இந்த ஒரே எண்ணில் இரண்டு லாரிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதை தொடர்ந்து இரண்டு லாரிகளையும் கைப்பற்றிய பல்லடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த அந்தோணி திரவியம் ஆரோக்கியம் என்ற 33 வயது நபர் ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் யாருக்கும் எவ்வித பாதிப்பு இன்றி இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...