ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கலைஞர் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி தலைமையில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒன்றிய அரசை கண்டித்தும் மற்றும் தி.மு.க அரசு கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயத் தொழிலாளர்களுக்கு தற்போது உள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து 1996-2001ஆம் ஆண்டு முடிய இருந்த கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி வேலையுறுதியளிப்பு திட்டத்தில் (MGNREGA) வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலவையில் உள்ள கோரிக்கையை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...