பவானி ஆற்றின் குறுக்கே கேளர அரசு அணை கட்ட தடையாணை வாங்க தமிழக அரசு தவறிவிட்டது- பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து, முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழு ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தி மு க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பவானி தடுப்பணை தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தடுப்பணை கட்ட தடையாணை பெறாத காரணத்தினால் கேரள அரசு மேலும் தடுப்பணைகள் கட்ட வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தடுப்பணைகள் கட்டுவதற்கு தடையாணை பெற வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்,  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பவானி ஆற்றில் கேரள அரசு தண்ணீர் எடுக்க எந்தவித வரையறையும் இல்லாத நிலையில், கேரள அரசு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

பவானி தடுப்பணை விவகாரத்தில் முறையாக வழக்கு நடத்தாத தமிழக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வருகின்ற 30-ம் தேதி கோவையில் அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.

மேலும் இந்த விவாகரம் தொடர்பாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் ஏப்ரல் முதல்வாரத்தில் கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...