ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காங்கேயத்தில் பல்வேறு பகுதி கோவில்களில் அன்னதானம்

காங்கேயம் பெருமாள் கோவில் முன்புறம் ஜெய் ஸ்ரீராம் அமைப்பினர் சார்பில், உணவுகள் கொண்டுவரப்பட்டு ராமர் திருவுருவப் படத்திற்கும், உணவுக்கும் பூஜைகள் செய்து பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பல்வேறு கோவில்களில் அன்னதானம் காலை முதலே வழங்கப்பட்டது. இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பேசேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்து அமைப்புக்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு திருக்கோவில் பக்தர்கள் சார்பில் காங்கேயம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.

காங்கேயம் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று கோவில்களில் அன்னதானம் காலை முதலே வழங்கப்பட்டது. இன்று அயோத்தி ராமர் கோவில் 500 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை கொண்டாடும் விதமாகவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவில் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.

காங்கேயம் பெருமாள் கோவில் முன்புறம் ஜெய் ஸ்ரீராம் அமைப்பினர் அன்னதானம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் உணவுகள் கொண்டுவரப்பட்டு ராமர் திருவுருவப் படத்திற்கும், உணவுக்கும் பூஜைகள் செய்து பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக காங்கேயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் கலந்துகொண்டு உணவுகளை பக்தர்களுக்கு வழங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் காங்கயம் வடக்கு ஒன்றியத் தலைவர்களின் ஆலோசனையின்படி அயோத்தியில் நடைபெற்ற இராமபிரான் ஆலய பிரான பிரஸ்திஷ்டை சிறப்பாக நடைபெறவும் பாரததேச மக்கள் அனைவரின் நலனுக்காகவும் பிரசித்தி பெற்ற சிவன்மலை ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விவசாய அணி பொறுப்பாளர் அருணாச்சலம், ஓபிசி அணி பொறுப்பாளர் கதர் கோவிந்தராஜ், தரவு மேலாண்மை பொறுப்பாளர் சஞ்சீவ் குமார், வர்த்தக அணி வடக்கு ஒன்றிய தலைவர் கனகராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கே.சண்முகம், தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடகப் பிரிவு காங்கேயம் நகர தலைவர் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...