மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் அழைப்பு

சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், "மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்" பொதுக்கூட்டம் வருகின்ற 25.01.2024 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற‌ உள்ளது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வருகின்ற 25.01.2024, வியாழக்கிழமை, மாலை 5.30 மணியளவில், சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலையில்,கோவை மாநகர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், "மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்" பொதுக்கூட்டம் நடைபெற‌ உள்ளது.

இதில் , தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் த.ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழக‌ நிர்வாகிகள், மேயர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்டக்கழகச் ‌செயலாளர்கள், பகுதிக்கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், BLA-2, பாக முகவர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...