வீடுகளில் தீபங்களை ஏற்றி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் - வானதி சீனிவாசன் வேண்டுகோள்

நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள ராம பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை பார்ப்பதற்காக ஏற்பாடுகள், அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை நேற்று முதல் தமிழக அரசு காவல்துறை வாயிலாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக ராம பக்தர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மகளிர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதன்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக நாளிலே அனைவரது வீட்டிலும் விளக்கேற்றி கொண்டாட சொல்லி இருக்கிறார். தமிழக அரசு, பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் இவ்வாறு மிரட்டுகின்ற பொழுது, நாம் அனைவரும் நமது ராம பக்தியை காட்டுவதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 5 விளக்குகளை ஏற்றச் சொல்லி இருக்கிறார் பிரதமர். நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் கொண்டாடுவோம் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...