வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா

தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோனாடிகள் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 549 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடைபெற்றது.



இதில் 1094 மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.



கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் N.R.அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை தாங்கினார்.

முதலாம் நாள் விழாவில், பெங்களூரு, எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த தலைமை தொழில்நுட்ப அதிகாரிஆஷிஷ் ஹுஷு, சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோனாடிகள் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 549 பேருக்கு பட்டம் வழங்கினர்.

மேலும் அவர் பேசும்போது, பட்டம் பெற்று சிறந்த நிறுவனங்களில் பணிபுரியும் போது நம் கண்முன்னே பறந்து விரிந்து கிடைக்கும் வாய்ப்புகளை திறன்பட உணர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணிபுரிந்தால் நம் நாட்டின் பொருளாதாரம் 20 முதல் 40 சதவீதம் மேம்பாட்டிற்கும் என்பதை உறுதிப்படக் கூறினார்.



இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் ஏர்பஸ் இன்னோவேஷன் சென்டர் நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் ராமநாதன் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மற்றும் எம். பி. ஏ, துறையை சேர்ந்த 545 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கினார். மேலும் துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு தங்கப்பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், துணை முதல்வர் ப கருப்புசாமி, துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...