வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா

தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோனாடிகள் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 549 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடைபெற்றது.



இதில் 1094 மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.



கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் N.R.அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை தாங்கினார்.

முதலாம் நாள் விழாவில், பெங்களூரு, எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த தலைமை தொழில்நுட்ப அதிகாரிஆஷிஷ் ஹுஷு, சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோனாடிகள் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 549 பேருக்கு பட்டம் வழங்கினர்.

மேலும் அவர் பேசும்போது, பட்டம் பெற்று சிறந்த நிறுவனங்களில் பணிபுரியும் போது நம் கண்முன்னே பறந்து விரிந்து கிடைக்கும் வாய்ப்புகளை திறன்பட உணர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணிபுரிந்தால் நம் நாட்டின் பொருளாதாரம் 20 முதல் 40 சதவீதம் மேம்பாட்டிற்கும் என்பதை உறுதிப்படக் கூறினார்.



இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் ஏர்பஸ் இன்னோவேஷன் சென்டர் நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் ராமநாதன் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மற்றும் எம். பி. ஏ, துறையை சேர்ந்த 545 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கினார். மேலும் துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு தங்கப்பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், துணை முதல்வர் ப கருப்புசாமி, துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...