தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது - கோவையில் இந்து முன்னணி தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் பேட்டி

வெளிநாடுகளில் கூட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சிறப்பு வழிபாடு செய்ய கூடாது என்ற தமிழக அரசு கூறியுள்ளது கண்டனத்திற்குரியது என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் காந்திபுரம் நகரில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இணைந்தனர்.



அயோத்தி ராமர் கோவில் பான பிரதிஷ்டை முன்னிட்டு நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் பொது விடுமுறை விட வேண்டும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். நாளை அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றி ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் கூட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சிறப்பு வழிபாடு செய்ய கூடாது என்ற தமிழக அரசு கூறியுள்ளது. திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனை கண்டித்து தான் இந்துகள் பாதுகாப்பு மாநாடு வரும் 26-ம் தேதி புளியம்பட்டியில் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாய்பாபா காலனி காவல் நிலையத்தை சேர்ந்த காவலரை தாக்கி உள்ளனர். அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் விளங்கி வருகிறது. தமிழக அரசு சிறுபான்மையினருக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் மீது வழக்கு தொடுக்காமல் இந்துக்களை வாட்டி வதைக்கிறது.வருகின்ற தேர்தலில் நாத்திக அரசாங்கத்திற்கு இந்துகள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார். திமுக சமூகநீதியை வாய் கிழிய பேசுகிறது ஆனால் திமுக எம்எல்ஏ வீட்டில் பணிபுரியும் பட்டிலின பெண்ணை தாக்கிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். திமுக அரசு கோவிலை இடிப்பதற்கும், கோவிலில் வழிபாட்டை நிறுத்துவதற்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கருணாநிதிக்கு அன்னாதானம் செய்வதற்கு கோவில் நிதியை பயன்படுத்துகிறார்கள்.

திமுக அரசாங்கத்திற்கு பின்னாடி தி.க, நக்சலைட் போன்ற இயக்கங்கள் இயங்கி வருகிறது. அதற்கு முதலமைச்சர் பலி ஆயிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் விளையாட்டு ஊக்குபடுத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோக்கமில்லை. இந்த மாநாட்டை நடத்தி துணை முதல்வர் ஆவாதற்கு திட்டமிட்டுள்ளனர். மற்ற அமைப்பினர் பேரணி நடத்தினால் தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால் மாநாட்டிற்காக திமுகவினர் அராஜகமாக பேரணியை நடத்துகிறார்கள். இந்துகள் கதாநாயகன் சூப்பர் ஸ்டாரான ராமருக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்க வேண்டும். அனைவருக்கும் ராமர் கோவில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Newsletter

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...