கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோட்டை ஈஸ்வரனை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.


கோவை: கோவை கோட்டைமேட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து சண்முக சுப்பிரமணியர் மற்றும் ராஜ கோபுர பரிவார மூர்த்திகளுக்கு திருக்கூட நன்னீராட்டு நடைபெற்றது.



பின்னர் கோவிலில் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோட்டை ஈஸ்வரனை வழிபட்டனர். அவரைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணமும் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

கொங்கு நாட்டிற்கு வந்த சோழ மன்னன் ஒருவரும், சமய முதலி என்ற குழுவினர்களும் காடு திருத்தி நாடு அமைத்து 36 ஆலயங்களை கட்டினர். அந்த 36 ஆலயங்களில் ஒன்று தான் ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில். பழமையான கோவில்களில் சங்கமேஸ்வரர் இருக்கும் கருவறையை மிகவும் பழமையானது. இந்த கருவறையின் மேல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விமானம் உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...