கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோட்டை ஈஸ்வரனை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.


கோவை: கோவை கோட்டைமேட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து சண்முக சுப்பிரமணியர் மற்றும் ராஜ கோபுர பரிவார மூர்த்திகளுக்கு திருக்கூட நன்னீராட்டு நடைபெற்றது.



பின்னர் கோவிலில் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோட்டை ஈஸ்வரனை வழிபட்டனர். அவரைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணமும் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

கொங்கு நாட்டிற்கு வந்த சோழ மன்னன் ஒருவரும், சமய முதலி என்ற குழுவினர்களும் காடு திருத்தி நாடு அமைத்து 36 ஆலயங்களை கட்டினர். அந்த 36 ஆலயங்களில் ஒன்று தான் ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில். பழமையான கோவில்களில் சங்கமேஸ்வரர் இருக்கும் கருவறையை மிகவும் பழமையானது. இந்த கருவறையின் மேல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விமானம் உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...