சிவில் வழக்கில் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை குனியமுத்தூர் இணை ஆணையர் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் புகார்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை உதவியோடு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு குனியமுத்தூர் காவல் நிலையம் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் புகார் கூறினார்.


கோவை: கோவையில் சிவில் வழக்கில் மாநகர காவல்துறை இணை ஆணையர் ரகுபதி ராஜா தலையிட்டு பொய் வழக்கு போடுவதாக கூறி இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

சண்முகம் என்பவர் கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். சண்முகம் மற்றும் அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் ஆனந்த என்பவரை அணுகி நிலத்தை வைத்து இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால், ஆனந்த், சண்முகத்திற்கு தெரியாமல் நிலத்தை வேறொரு நபருக்கு பத்திரத்தை மாற்றி சண்முகத்தை ஏமாற்றி நிலத்தை விற்பனை செய்துள்ளார்.

பின்னர் சிவானந்தம், சக்திவேல் மற்றும் கனகராஜ் சண்முகத்தை மிரட்டி நிலம் எனக்கு சொந்தம் என்று பிரச்சனை செய்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் சண்முகம் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை உதவியோடு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு குனியமுத்தூர் காவல் நிலையம் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

குனியமுத்தூர் இணை ஆணையர் ரகுபதிராஜா சண்முகம் இடத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் வேலை ஆட்களை மிரட்டி உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அறிக்கை ஒன்று வெளியீட்டார். அதில், சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்று கூறியும், அதனை மீறி தலையிட்டு பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...