உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்- போக்குவரத்து பாதிப்பு

புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை அடர்ந்த வனப்பகுதி நடுவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் தண்ணீரை தேடி கடந்த சில தினங்களாகவே நிலப்பரப்பு பகுதிக்கு அதிகளவு வர துவங்கியுள்ளன.

குறிப்பாக உடுமலை மூணாறு சாலையில் காமனூத்து பள்ளம், எஸ் பெண்ட், புங்கன் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன்உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு செய்தனர். எனவே உடுமலை மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்ப கூடாது. அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி புகைப்படம் எடுப்பதோ முயற்சி செய்யக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உடுமலை மூணாறு சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...