உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்- போக்குவரத்து பாதிப்பு

புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை அடர்ந்த வனப்பகுதி நடுவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் தண்ணீரை தேடி கடந்த சில தினங்களாகவே நிலப்பரப்பு பகுதிக்கு அதிகளவு வர துவங்கியுள்ளன.

குறிப்பாக உடுமலை மூணாறு சாலையில் காமனூத்து பள்ளம், எஸ் பெண்ட், புங்கன் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் புங்கன் ஓடை அருகில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன்உலா வந்ததால் உடுமலை மூணார் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு செய்தனர். எனவே உடுமலை மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்ப கூடாது. அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி புகைப்படம் எடுப்பதோ முயற்சி செய்யக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உடுமலை மூணாறு சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...