உடுமலை அருகே குழிப்பட்டியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக் கட்டைகளை கடத்த முயன்ற நான்கு பேர் கைது

குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி கடத்தியதை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் அரிய வகை தாவரங்கள் உயிரினங்கள் வனவிலங்குகள், சந்தன மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் குழிப்பட்டி பகுதியில் உடுமலை வனத்துறையினர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து உடுமலை வனத்துறைக்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ், ஆகியோர் சந்தன மரத்தை வெட்டியதாக ஒப்புக்கொண்டனர்.



இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள எட்டு கிலோ உயர் ரக சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், உடுமலை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர். உடுமலையில் சந்தன மரங்களை வெட்டி கேரளா கடத்த ஒன்று நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...